இது என்ன சினிமா போலீசா..? ரஜினியை கிண்டல் செய்த டி.டி.வி., தினகரன்

போலீஸ்காரர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்க, இது என்ன சினிமாவா..? என தூத்துக்குடி விவகாரத்தில் போலீசாருக்கு ஆதரவாக பேசிய ரஜினியை, எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கிண்டலடித்துள்ளார்.

போலீஸ்காரர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்க, இது என்ன சினிமாவா..? என தூத்துக்குடி விவகாரத்தில் போலீசாருக்கு ஆதரவாக பேசிய ரஜினியை, எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கிண்டலடித்துள்ளார். 

சென்னையில் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கூறியதாவது:- ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அவர் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குரலாக ஒலிக்கிறார். தமிழக காவல்துறை எப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். குட்கா ஊழலுக்கு அவர்கள்தான் காரணம். அது ரஜினிக்கு தெரியாதா..? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, குடிசைகளுக்கு, வாகனங்களுக்கு தீ வைத்தது போலீசார் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். இந்தக் குற்றச்சாட்டிற்கு போலீசார் தரப்பில் இருந்தே இன்னும் மறுப்பு வரவில்லை.

ஆனால், போலீசுக்கு ஆதரவாக ரஜினி பேசுகிறார். சினிமாவில் ஒரு நிலைப்பாடும், வெளியே ஒரு நிலைப்பாடும் அவர் எடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் வாயில் வந்ததெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருடைய தொகுதிக்கே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அவரால் செல்ல முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டோம் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், சட்டப்பேரவையில் முறையாக தீர்மானம் நிறைவேற்றி அவசரச் சட்டம் பிறப்பிக்காவிட்டால், நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் என்ன செய்தோம் என்று சட்டப்பேரவையில் சொல்கிறாரே தவிர, என்ன செய்யப்போகிறோம் என்பதை அவர் சொல்லவில்லை. இன்னும் 2, 3 மாதங்களில் பாருங்கள், ஸ்டெர்லைட் பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும், இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...