கோவையில் நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்ய அனுமதி

கோவை: நீரா பானம் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை கோவை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


கோவை: நீரா பானம் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை கோவை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தென்னை சாகுபடியில் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாக உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும் 'நீரா' பானத்தை இறக்கவும், அதனைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய 'தமிழ்நாடு நீரா விதிகள் 2017'-யை வடிவமைத்து, அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர். கோவையில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இதன் உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

இதன்மூலம், நீரா பானத்தில் இருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...