இளையராஜா இசைக்கு ரஷ்ய கலாச்சார நடனம் ஆடி அசத்திய கலைஞர்கள்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக நாட்டுப்புற நடனங்களை ரஷ்ய நாட்டு நடனக் கலைக்குழுவினர் நடனமாடிக் காட்டியது அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக நாட்டுப்புற நடனங்களை ரஷ்ய நாட்டு நடனக் கலைக்குழுவினர் நடனமாடிக் காட்டியது அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.

இந்திய - ரஷ்யா கலாச்சார பரிவர்த்தனை அடிப்படையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடன கலைக்குழுவினர் நமது நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ரஷ்ய நாட்டின் கிராமப்புற நடனக் கலைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும், இங்குள்ள பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை அறிந்து கொள்ளவும் இருபது பேர் கொண்ட நடனக் குழுவினர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள், இந்தியா - ரஷ்ய கலாச்சார நடனங்களை வெகு நேர்த்தியாக ஆடிக்காட்டி அசத்தினர். குறிப்பாக, தமிழகத்தின் நாட்டுப்புற நடனங்களை ரஷ்ய பெண் கலைஞர்கள், அவர்களது நடன பாணியில் ஆடியதும், இளையராஜாவின் இசையில் உருவான தமிழ் பாடல்களுக்கு ரஷ்ய நாட்டின் பாரம்பரிய நடனக்கலையான பாலே நடன பாணியில் ஆடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான பிரபல ஜெய் கோ பாடலுக்கும் நடனம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.



நுனிக்காலை மட்டும் தரையில் ஊன்றி மின்னல் வேகத்தில் சுழன்றாடி, தங்களது நாட்டின் பழம்பெரும் நடனக் கலைகளின் பெருமையை இந்த ரஷ்ய நடனக்குழுவினர் வெளிக்காட்டினர்.

"தமிழகத்தின் நாட்டுப்புறக் கலை நடனங்கள் ரஷ்யாவில் மிகவும் பிரபலம். இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரத நாட்டியத்தை ரஷ்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதுபோன்ற கலாச்சாரக் கலை பரிவர்த்தனை மூலம் இந்தியா - ரஷ்ய உறவு மேலும் பலப்படும். இரு நாட்டு மக்களிடமும் ஒரு நெருங்கிய புரிந்துணர்வை ஏற்படுத்தும்," என்கின்றனர் ரஷ்ய நாட்டு நடனக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்.

மேட்டுப்பாளையத்தில் 2 நாட்கள் தங்கவுள்ள இந்த ரஷ்ய நடன குழுவினர், இங்குள்ள கிராமப்புற இசை மற்றும் நடனங்கள் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...