சிறுமுகை அருகே புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மொக்கைமேடு, காப்புக்காடு பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு வனத்துறையினர் ரோந்து சென்ற போது, நாட்டுத்துப்பாக்கியுடன் 6 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக நடமாடிக் கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி வளைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மொக்கைமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பன், அய்யாவு, முருகேஷ், நாகராஜ், குஞ்சான், ராசுக்குட்டி ஆகியோர் மீது வனச்சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 6 பேருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.

வனக்குற்றங்களுக்கு இங்கு இதுவரை அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதியின் இந்தத் தீர்ப்பு வனக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கை என வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...