மசினகுடி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வன ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்காரா சரகத்துக்கு உட்பட்ட கல்லல்ஹா பாலம் பகுதியில் தனியார் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த வாகனம் அத்துமீறி வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வன ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால், வன ஊழியர்கள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் பிரசாத் (25), கவின் (26) மற்றும் உதகை நஞ்சநாட்டைச் சேர்ந்த மோகன் (35) என்பது தெரிய வந்தது. பின்னர், சரகர் மாரியப்பனின் உத்தரவின் பேரில், மூவரிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, அவர்களது வாகனம் விடுவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...