மதவாத சக்திகளின் குரல் தான் ரஜினியின் குரல்: திருமாவளவன் விமர்சனம்

கோவை: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சக்திகளின் குரல் தான் ரஜினியின் குரல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.


கோவை: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சக்திகளின் குரல் தான் ரஜினியின் குரல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நிதி உதவி வழங்கிய ரஜினியின் மனித நேயம் பாராட்டத்தக்கது, ஆனால் தூத்துக்குடி சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என முதலமைச்சர் கூறியதையே ரஜினியும் எதிரொலித்திருக்கிறார்.

குரல்

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சகதிகளும் இதே கருத்தை தான் சொல்கின்றன. எனவே ரஜினின் குரல் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சக்திகளின் குரலாக உள்ளது. இது ரஜினி தானாக பேசுகிறார் என்று நம்ப முடியாது. திரைப்படத்தில் ரஜினியை யாரோ இயக்குவது போல, அரசியலிலும் இவருக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

முதலமைச்சரும் நடிகர் ரஜினிகாந்தும், யார் சமூக விரோதிகள்? என்பதை விளக்க வேண்டும். 13 பேர் உயிரிழப்பிற்கு காரணமான சமூக விரோதிகளை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். ஏன் கைது செய்யவில்லை? சமூக விரோதிகள் என இவர்கள் கூறுவது போராடும் மக்களையேயாகும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடுவது சட்ட பூர்வமாக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., நடத்தும் மாதிரி சட்டமன்றத்தை ஒரு போராட்ட வடிவமாகத் தான் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் நாம் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் வேலையில், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிவகங்கையில் தலித்துகள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இது காட்டுமிராண்டித் தனமான போக்கு. சிவகங்கையில் கொடூரமாக நடைபெற்ற சாதி வெறி போக்கை கண்டிக்கிறோம். குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகவே தமிழக வாழ்வுரிமை கட்சி, வேல்முருகன் மீது வழக்கு போட்டுள்ளனர். அவர் மீது புனையப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...