ரஜினிக்கு தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் பற்றி தெரியாது - வைகோ

மேட்டுப்பாளையம்: ரஜினிக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்தோ தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்தோ எந்த அரிச்சுவடியும் தெரியாது என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம்: ரஜினிக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்தோ தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்தோ எந்த அரிச்சுவடியும் தெரியாது என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி நதி மாசடைதல் குறித்த விழிப்புணர்வு புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மத்திய அரசின் உளவுத் துறையின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டால் இந்தியாவின் ஒற்றுமை சிதையும் என்றால் ராஜ துரோகமா? இது ராஜ துரோகம் என்றால் இந்தியாவின் ஒற்றுமை சிதையும் என ஆயிரம் முறை கூறுவோம். இது போன்ற வழக்குகளால் பயமுறுத்த இயலாது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தோ அல்லது தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் பற்றியோ ரஜினிக்கு எந்த அரிச்சுவடியும் தெரியாது. ஐம்பதாயிரம் மக்கள் திரண்ட ஸ்டேர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் எந்த போலீசாவது தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்களா? சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் சமூக விரோதிகளா? தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடக்கூடாது என்று தான் நாங்கள் போராடுகிறோம்.

அவர் கூறியுள்ள அறிவுரைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ரஜினியின் கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களைக் காயப்படுத்தியுள்ளது என்பதை அவர் என்றாவது உணர்வார்." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...