தூத்துக்குடி சம்பவம் : 7 பேரின் உடல்களை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு

தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின்  உடல்களை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவர், ஒரு தடயவியல் நிபுணர் அல்லது எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர் பரிசோதனை நடத்த வேண்டும். குண்டு பாய்ந்த, வெளியேறிய பகுதிகளை போட்டோ எடுக்க வேண்டும். உடலை முழுமையாக அனைத்து கோணங்களிலும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை முடிந்த உடல்களை உறவினர்கள் கேட்டால்மட்டும் கொடுக்கலாம், என உத்தரவில் கூறியுள்ளது.

இதனிடையே, தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்த கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் தடயங்கள் அழிக்கப்படும் என சங்கரசுப்பு என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர சுப்புவின் எதிர்ப்பை அடுத்து ஒரு வாரம் காலத்திற்கு ஆறு பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த தடை விதித்து தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...