சீமானைத் தொடர்ந்து ரஜினியையும் விடாத தூத்துக்குடி மக்கள் (வீடியோ)

தூத்துக்குடியில் வன்முறையால் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், இளைஞர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திகைத்த சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தூத்துக்குடியில் வன்முறையால் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், இளைஞர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திகைத்த சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, "யார் நீங்க..?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா..?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.



அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்பதும் தெரியவந்தது. 

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வருகையின் போது, கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர், தமிழுக்காக போராட்டம் நடத்தினால் மட்டும் பத்தாது, தமிழர்களை வாழவிட வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...