டுவிட்டரில் டிரெண்டாகிய 'நான்தான்பாரஜினிகாந்த்' ஹேஸ் டேக்

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து பேசிய நிலையில், தேசிய அளவில் இன்று 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் பிரபலமாகி வருகிறது.

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து பேசிய நிலையில், தேசிய அளவில் இன்று 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் பிரபலமாகி வருகிறது. 

அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, ``யார் நீங்க..?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா..?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், டுவிட்டர் வலைதளத்தில், 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தேசிய அளவில் பிரபலமாகியுள்ள ஹேஸ் டேக்கில் இது 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வரும் ஜுன் 07-ம் தேதி வெளியாகவுள்ள காலா படத்தின் ப்ரோமோஷனைக் காட்டிலும், இந்த 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் வைரலாகி விட்டது போலும்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...