சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் - ரஜினிகாந்த்

சென்னை: ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூடு நடைபெற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூடு நடைபெற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நடிகர் இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து சென்னை சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை சீர்குலைத்தனர். அதே போலத்தான், ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் தான் வன்முறை வெடித்தது.

முதலில் அவர்கள் தான் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அது தான் இந்த பிரச்சினைக்கு காரணம். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்." என்றார். 

பாத்தீங்களா? 

ரஜினியின் இந்த பேச்சை தொடர்ந்து, செய்தியாளர்கள் "சமூக விரோதிகள் புகுந்துவிட்டத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்ற கேள்வியெழுப்பினர். அதற்கு, "எனக்கு தெரியும்" என்று ஆவேசமாக பதிலளித்து சென்றார். 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...