மக்களுக்காக மாநில வரியை குறைத்த கேரளா: பெட்ரோல், டீசல் விலை ரூ. 1 குறைப்பு

கேரளா: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

கேரளா: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி நிர்ணயித்து வரும் நிலையில், கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பின்னா் பெட்ரோல், விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. 

16 நாட்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. சென்னையில் வெறும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்ட பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.42-க்கு இன்று விற்கப்படுகிறது. டீசலும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்டு ரூ. 73.17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எரிபொருள் மீதான மாநில அரசு வரியை கேரளா குறைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. 

கடந்த நவம்பர் 2017 நிலவரப்படி, டீசல் மீது 24.52 சதவீதமும், பெட்ரோல் மீது 31.8 சதவீதம் வரியும் கேரளா வசூல் செய்கிறது. இவை போக கூடுதலாக ஒரு சதவீத செஸ் வரியும் கேரளாவில் வசூலிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் எரிபொருட்கள் வரி மூலம் கேரள அரசு ரூ 7,795 கோடியை வருவாயை ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...