குழந்தை பாதுகாப்புச் சட்டம் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

இந்தப் பயிற்சி பட்டறையில் காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்தப் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் சார்ந்த சட்டங்களான, இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய சாரம்சங்கள் பற்றி பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ரூபா கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பட்டறையைத் தொடர்ந்து, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் நலன் குறித்தும், அனைத்து தேயிலை தோட்டங்களில் பிங்க் கழிவறைகள் அமைப்பது பற்றியும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...