சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : கேரள மாணவி உள்பட 4 பேர் முதலிடம்

இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். 

சி.பி.எஸ்.இ., என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 16,38,428 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதில், அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த பிரகார் மிட்டல், உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியைச் சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளனர். 

தேர்வர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...