பாரம்பரிய கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு கற்றுத்தரும் மனிதநேயமிக்க தலைமை ஆசிரியர்

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே சமயத்தில், சங்கமம் கலைக்குழுவின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். கிராமிய கலைகள் மீது இருந்த ஆர்வம் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் கிராமிய கலைகளைக் கற்றுக்கொண்டார். அதன்பின், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு இக்கலையின் மீது ஆர்வத்தைத் தூண்டவும் 2010-ம் ஆண்டு சங்கமம் கலைக்குழு ஒன்றை ஆரம்பித்தார். 



அச்சங்கம் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக 850 கிராமிய கலைஞர்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கனகராஜ் கூறுகையில், "இந்தக் கலை மூலமாக நல்ல பழக்கங்களையும், நல்ல உறவையும் கொண்டு வர முடியும். 



இந்தக் கலையை கற்றுக்கொண்டால் மன உளைச்சல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாட்டுபாவடை, வேட்டி போன்றவை இக்கலையில் பயன்படுத்தப்படுவதால் பாரம்பரிய உடைகள் மீது மக்களுக்கு ஆர்வம் வரும்.

இறைவழிபாடு செய்து வணக்கம் வைத்து தொடங்கப்படுவதால், இக்கலையைப் பயின்றோர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். சாதி, மதம் என இன வேறுபாடின்றி இக்கலையை மக்கள் கற்றுக்கொள்வதால், சமத்துவம் மக்களிடையே உருவாகிறது. சமூக பிரச்சனைகளை மக்களிடையே எடுத்துக் கூறுவதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகிறது. கல்வி பாடத்திட்டத்தில் இக்கலை குறித்து பாடம் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் என்ற கிராமத்தில் இவரிடம் ஒயிலாட்டத்தைக் கற்றுக்கொண்ட 4 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர் வரை 80 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஒயிலாட்டத்தை அரங்கேற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...