உயிரைப் பொருட்படுத்தாத ஆபத்தான குளியல் : கட்டுப்பாடுகளை விதிக்குமா மாவட்ட நிர்வாகம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். 



வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஆற்றுப் பகுதியின் ஒரு பகுதியில் ஆழமான சுழல் உள்ளது. கடந்த சில வருடங்களில் சுற்றுலா வந்தவர்களில் 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், இந்தத் தடையை பொருட்படுத்தாமல் ஆபத்தான சுழல் பகுதிக்குள் நுழைந்து குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, கூழாங்கல் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தான பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...