குளத்தை காணோம்...! : வடிவேலு பட பாணியில் திருப்பூரில் புகார்

திருப்பூர்: மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

தாராபுரத்தை அடுத்த செட்டிக்களம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியின் 2017 - 2018 சமூக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது. 

அப்பகுதியில் குளங்கள் எதுவுமே இல்லாத நிலையில், இது போன்ற அறிக்கை வந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் எவ்வித குளமும் இல்லை என்றும் கடந்த 19-ம் தேதி அன்று சான்றிதழையும் பெற்றனர். 

குளம் அமைக்காமல், மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'குளத்தை காணோம்' என்று வடிவேலு பட பாணியில் நஞ்சியம்பாளையம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...