அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

பத்திரிக்கையாளர்களை தெருநாய் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தால், அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பத்திரிக்கையாளர்களை தெருநாய் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தால், அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், நேற்று மாநில செய்தி தொடர்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களை பார்க்கச் சென்றார். அப்போது, அவருக்கு பெண்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினர். அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க மற்றும் இவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், அ.தி.மு.க., ஐடி விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை மிகவும் மோசமாக விமர்சித்து டுவீட் வெளியிட்டு இருந்தார். அதாவது, "துணை முதலமைச்சர் மருத்துவமனையில் பார்வையிட்டு இருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் வாசலில்தான் இருக்க வேண்டும். உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக, பிஸ்கட்டுக்கு குலைக்கும் தெருநாய்கள் கேட்டில் தான் கட்டி வைக்கப்படுவார்," எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அந்த டுவீட்டை பிரபாகரன் நீக்கினார். இதைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஹரி பிரபாகரன் விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...