பெட்ரோல் விலை இப்படி எகிற, பிட்னஸ் சேலஞ் கேக்குதா?: பிரதமரை கலாய்த்த கேரள மக்கள்

திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இந்த நிலையில், பிரதமர் மோடி பிட்னஸ் சேலஞ் எடுத்திருப்பதைக் கண்டித்து கேரள மக்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இந்த நிலையில், பிரதமர் மோடி பிட்னஸ் சேலஞ் எடுத்திருப்பதைக் கண்டித்து கேரள மக்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தேசிய அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில்,  கிரிக்கெட் வீரர் வீராத் கோலி சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவால் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கோலியின் சவாலை ஏற்றதாகவும், விரைவில் தானும் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிடுவேன் என்றும் மோடி அறிவித்திருந்தார். மோடியின் இந்த செயல் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதைவிட அதிக அளவு பிரச்சனைகளை சந்தித்தது.

முக்கியமாக நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் மோடி இப்படி நடந்து கொள்வது மக்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. கேரளாவில் மக்கள் இதற்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, பிட்னஸ் சேலஞ்ச் இரண்டையும் கண்டிக்கும் விதத்தில், மோடிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளில் போராடி இருக்கிறார்கள்.

அதோடு பிட்னஸ் சேலஞ்சை கிண்டல் செய்யும் விதமாக, பெட்ரோல் பங்கில் உடற்பயிற்சி செய்து உள்ளனர். மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே அவர்கள் உடற்பயிற்சி செய்து போராட்டம் செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...