தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்- ஜி.கே.வாசன்

திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது கூறுகையில், "மக்களுக்கு தொடர்ந்து பாதகம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. ஆலை மூடப்படும் என்ற நம்பிக்கையை தூத்துக்குடி மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆலையை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தோல்வியை காட்டுகிறது. முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தவறை தமிழக அரசு கேட்காத பட்சத்தில் வருகின்ற காலத்தில் தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...