உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 'தேயிலை சுற்றுலா விழா' தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.

தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கர்நாடகா மாநில கலைக் குழுவினரின், தொள்ளு குனிதா நடனத்துடன் இரண்டு நாள் நடக்கும் தேயிலை சுற்றுலா விழா தொடங்கியது. இதனை தொழில் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரகுமார் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன் தொடங்கி வைத்தார்.



1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவையொட்டி இடம் பெற்றுள்ள கண்காட்சியில், பிளாக் டீ, ஒயிட் டீ, சில்வர் டிப்ஸ், ஆர்கானிக் டீ என பலதரப்பட்ட தேயிலை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.



இருதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய் என பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாகக் கருதப்படும் தேயிலைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும் தேயிலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.



இதில், தேயிலை வாரியம், இன்கோ சர்வ் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியான பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகள் மற்றும் அதிக தேயிலை தூளை விற்பனை செய்த தொழிற்சாலைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்தத் தேயிலை சுற்றுலா விழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...