சமுதாய முன்னேற்றத்தில் தனிநபரின் பங்கு மிகவும் முக்கியம்: கடற்படை தளபதி லன்பா

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:- உங்கள் வாழ்வை பலர் உருவாக்கியதைப் போன்று, நீங்கள் பிறரிடம் அன்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும். வாழ்க்கை பிறருக்காக வாழவில்லையெனில், அது வாழ்க்கையல்ல என அன்னை தெரசா கூறியதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.



மாணவர்கள் இன்று இருக்கும் சுற்றுச்சூழல் நிந்தரமானது என எண்ணிவிடக் கூடாது. வாழ்க்கை என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக முதியவர்களுக்கு உதவுவதோடு நீங்கள் பெற்ற கல்வியறிவையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஹென்றி லாரன்ஸ் இப்பள்ளியை துவக்கிய காலம் முதல் பாதுகாப்பு துறைக்கும், இப்பள்ளிக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இது மேலும் வளரும் என நம்புகிறேன். இப்பள்ளியில் படித்த பலர் வெண்ணிற ஆடை அணிந்து கடற்படையில் பணிபுரிவது எனக்கு பெருமையாக உள்ளது.



வரும் காலங்களில் உங்களில் பலர் பாதுகாப்பு படைக்கு சேருவீர்கள் என நான் நம்புகிறேன், என்றார்.

இறுதியாக, விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சுழற்கேடயங்களையும் அவர் வழங்கினார். பள்ளி தலைவர் தேசிராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...