கோவை பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது

கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.


கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

2016-2017-ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்கான உறவில் சிறந்து விளங்கிய நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், இணக்கமான தொழில்துறைகளை வளர்ப்பதற்கு புதுமையான அணுகுமுறைகள், மனித இழப்புகள் தவிர்த்தல், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறன் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு சிறந்த நிறுவனத்திற்கான தேர்வு நடைபெற்றது.

கடைசியில், 14 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த விருது வழங்கப்பட்டது. இதனை மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் வழங்கினார்.

விருது பெற்றது தொடர்பாக பிரிக்கால் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறுகையில், "தொழிலாளர்களிடையே முற்போக்கு சிந்தனை மற்றும் கடின உழைப்பை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறந்த நிர்வாகம், தொழிலாளர்களின் கடின உழைப்பே இந்த விருதை வெல்ல முக்கியக் காரணம். எனவே, எங்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடின உழைப்புகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...