பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்டெர்லைட் போராட்டம்' டிரென்ட் ஆகியுள்ளது.
பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்டெர்லைட் போராட்டம்' டிரென்ட் ஆகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்ததால், போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டை வீசினர்.
இதனால், அலறியடித்துக் கொண்டு ஓடிய போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடத்தப்பட்டு வரும் போராட்டம், டுவிட்டரில் தேசிய அளவில் டிரென்டாகியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து, ஹேஸ்டேக் ஸ்டெர்லைட் போராட்டம் (#Sterlite protest) என டைப் செய்து தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இதனால், இது முதல் டிரென்டாக உள்ளது. இதேபோல, தூத்துக்குடி (Thoothukudi), துட்டிகோரின் (Tuticorin) உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளும் டிரென்டாகி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்ததால், போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டை வீசினர்.
இதனால், அலறியடித்துக் கொண்டு ஓடிய போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடத்தப்பட்டு வரும் போராட்டம், டுவிட்டரில் தேசிய அளவில் டிரென்டாகியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து, ஹேஸ்டேக் ஸ்டெர்லைட் போராட்டம் (#Sterlite protest) என டைப் செய்து தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இதனால், இது முதல் டிரென்டாக உள்ளது. இதேபோல, தூத்துக்குடி (Thoothukudi), துட்டிகோரின் (Tuticorin) உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளும் டிரென்டாகி வருகிறது.