தேசிய அளவில் டிரென்டான தூத்துக்குடி 'ஸ்டெர்லைட் போராட்டம்'

பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்டெர்லைட் போராட்டம்' டிரென்ட் ஆகியுள்ளது.

பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்டெர்லைட் போராட்டம்' டிரென்ட் ஆகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்ததால், போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டை வீசினர்.

இதனால், அலறியடித்துக் கொண்டு ஓடிய போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடத்தப்பட்டு வரும் போராட்டம், டுவிட்டரில் தேசிய அளவில் டிரென்டாகியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து, ஹேஸ்டேக் ஸ்டெர்லைட் போராட்டம் (#Sterlite protest) என டைப் செய்து தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இதனால், இது முதல் டிரென்டாக உள்ளது. இதேபோல, தூத்துக்குடி (Thoothukudi), துட்டிகோரின் (Tuticorin) உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளும் டிரென்டாகி வருகிறது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...