கோவை: தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
கோவை: தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 12,337 பள்ளிகளில் இருந்து 4,83,120 மாணவர்கள், 4,81,371 மாணவிகள் என 9,64,491 பேர் எழுதினர். இதுதவிர, 36,649 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை நாளை (மே 23) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியிலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.