நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.

நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளின் மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.



வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜீ மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசரக் கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சிலிண்டர், வேகக் கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது.



இதில் முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...