வீட்டு வேலைக்காரப் பெண்ணை கொலை செய்த வழக்கில் அமைச்சர் உறவினரின் ஓட்டுநர் கைது

கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.


கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் 36 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு அதில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த பெண் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டதும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. மேலும், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜெயந்தி என்ற பெண் காணமல் போனதும், தற்போது இறந்து கிடந்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய போது, இராமநாதபுரம் ஜோதி நகரைச் சேர்ந்த மணிவேல் என்பவர் பிடிபட்டார். இவர் சுகாதார துறை அமைச்சரின், உறவினர் வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்ற நிலையில், வீட்டுத் தூய்மை பணிக்காக வந்த ஜெயந்தியை கொன்ற மணிவேல், அவரை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடைக்குள் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில், கொலைக்கான காரணம் கற்பழிப்பா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...