இனி பல்கலைக்கழங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது: தடை விதித்தது யு.ஜி.சி.,

உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுப்புறச் சூழல் தினம் வரும் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஐ.நா., சபை சார்பில் 'பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம்' என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்து யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் டீ கப்கள், உணவு எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பைகள், டிஸ்போசபிள் உணவு பரிமாறும் கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க இது நல்ல சந்தர்ப்பம். மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விரும்புகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்கவும் பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...