பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் - மத்திய அமைச்சர்

திருப்பூர் : வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 



திருப்பூரில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் மூலம் நிதி உதவி பெற்று அமைக்கப்பட்ட லிவ்லிகுட் தொழில் மையத்தினை பார்வையிட்ட அமைச்சர் கிரி ராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "முதல் முறையாக நிதி நிலையை சீர் செய்ய அமல்படுத்த ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கையால் வரி வசூலானது. வழக்கத்தை விட 100 கோடியைத் தாண்டியுள்ளது. டெக்ஸ்டைல் துறையின் தாய் இடமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் உற்பத்தி 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. 



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் பல நவீன முறைகளைப் பின்பற்றி வருகிறது. வரும் 2020-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இத்துறை இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த துறையாக உருவெடுத்து வருகிறது. மேலும், சிறு குறு வர்த்தகர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதம மந்திரியின் சிறு குறு தொழில்களுக்கான கடன் திட்டத்தின் கீழ், கடன் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதற்காக எந்தவித சொத்து பிணையும் வாங்குவதில்லை. மேலும், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., நிச்சயம் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்கும்." என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...