கோவையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அரிய வாய்ப்பு: டி.என்.சி.ஏ., பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

பி.எஸ்.ஜி., ஐஎம்எஸ்ஆர் மைதானங்களில் 9-வது ஆண்டு கோடை பயிற்சி முகாம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று முதல் மே 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த இளம்வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் சான்றிதழ் பெற்ற சிறந்த பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்தப் பயிற்சிக்காக மாவட்ட அளவில் இருக்கும் அகடாமியில் இருந்து, ஒவ்வொரு பிரிவிலும் 45 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வாளர் ஆர். வெங்கடேஷ் கூறுகையில், "வீரர்கள் பல்வேறு அகாடமிகளில் பயிற்சி பெற்று வரும் நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற முகாம்கள் அவர்களது வாழ்க்கையில் முக்கியமானதாகும். இது போன்ற முகாம்களில் ஆட்ட நுணுக்கங்களை அனுபவ வீரர்களிடம் இருந்து பெற்று, இளம் வீரர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்," என்றார்.



இந்தப் பயிற்சி முகாமில் இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...