குப்பைகளால் நிரம்பி வழியுது நொய்யல்

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது.

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது. 



கோவையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நொய்யல் ஆற்றுப் படுகை பாழ்பட்டு வருகிறது. தெருநாய்களின் வாழ்விடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவருகிறது வற்றிப்போன நொய்யல் ஆற்றங்கரை. 



காருண்யா நகர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாமல் பயணித்த நோய்யலின் கதி இது என்று நொந்து கொள்கின்றனர் ஆர்வலர்கள். 



இது குறித்து நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், "ஆற்றுப் படுகையில் இருந்த மரங்களை அகற்றுவதும் இந்த வறட்சிக்குக் காரணமாக உள்ளது. நொய்யல் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதோடு, நொய்யலில் கழிவு நீரும் கலக்கப்படுகிறது. இது வேதனையான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...