கனரக வாகனங்கள் உக்கடம்-ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை - துணை ஆணையர்

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறுகையில், "உக்கடம்-ஆத்துப்பாலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கனரக வாகனங்கள் பொள்ளாச்சி மற்றும் கேரளா சாலைகளுக்கு செல்ல நஞ்சுண்டாபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்ல மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை." என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...