கோவையில் விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்தவருக்கு அபராதம்

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் முதன் முறையாக கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த மரம் ஒன்றின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "நேற்று மாலை 'மே-பிளவர்' என்ற 20 வயது மதிக்கத்தக்க மரம் லாரி மோதி விழுந்தது. இது குறித்து நீதிமன்ற வளாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த லாரி ஓட்டுனரை பிடித்தனர். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்த அதிகாரிகள், எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? என்பதை இன்று தெரிவிக்கவுள்ளனர்.

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்த அதிகாரிகள் முதன் முறையாக விபத்து மூலம் மரத்தை சாய்த்தவருக்கு அபராதம் விதிக்கின்றனர்." என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...