பிளஸ் 2 பொதுத்தேர்வு : தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு.


சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு. 



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு எழுதும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித் தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர். 

முடிவு 

இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ .செங்கோட்டையன் வெளியிட்டார். 



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு :- 

* தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்.

* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்.

* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,

* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...