பிரதமரை கொலை செய்வதாக தொலைபேசியில் பேசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் சேலத்தை சேர்ந்த நபரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் போது பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக பேசிய ஆடியோ சமூவ வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ரபீக்கை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்த அவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் ரபீக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

முகமது ரபிக் கைது செய்யப்பட்டதற்கான ஆணை மருத்துவமனையில் அவரிடம் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ரபீக் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதும், அதைத் தொடர்ந்து கார் திருட்டு, லாரி கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...