கோவையில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் உள்ள பாடகிரி மலைப் பகுதியில் இருந்து கோவை வழியாக ஜீப்பில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், பீளமேடு போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கு இடமான ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர்.



அப்போது அதில், மூட்டை மூட்டையாய் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர், ஜீப்பில் வந்த இருவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் வனராஜ் (45) மற்றும் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் அவர்கள் இருவரையும் கைது போலீசார் ஜீப் மற்றும் அதில் இருந்த 250 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...