மழை நீரில் சிக்கிய முதியவரை மீட்டு மறுவாழ்வு அளித்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.



மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கோவை மத்திய ரயில்நிலையம் லங்கா கார்னர் பாலத்தின் அடியில் குளம் போல நீர் தேங்கிக் கிடந்தது. அதில், ஒரு வயதான ஆதரவற்ற நடக்க முடியாத முதியவர் அமர்ந்திருந்தார். பெருமளவு தண்ணீர் சூழ்ந்ததால், தண்ணீருக்குள் மாட்டிக் கொண்ட முதியவரால் வெளியே வர முடியவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஏராளமானோர் வேடிக்கை மட்டுமே பார்த்துச் சென்றனர்.



இந்த நிலையில், தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், முதியவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த முதியவருக்குத் தேவையான முதலுதவிகள் அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறார். ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் இந்த செயலை, ஏராளமான பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...