தமிழகத்திலும் மனிதக் கழிவுகளை அகற்ற ரோபோக்களை பயன்படுத்தத் திட்டமா..?

கோவை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது. 



கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது :- 16 மாவட்டங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சில இடங்களில் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரியகுளம் கலவரத்தின் பின்னணி ஆராயப்பட வேண்டியதாகும். அங்கு சகஜநிலை இன்னும் திரும்பவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படவில்லை. மேலும், வள்ளியம்மாளின் சடலத்தை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றப்பட வேண்டும்.

துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

கேரளாவில் மனிதக் கழிவுகளை அகற்ற ரோபாக்கள் பயன்படுத்தப்படுவதைப் போல, தமிழகத்திலும் பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளோம். வருங்காலத்தில் நிதி ஒதுக்கி ரோபாக்கள் பயன்படுத்தப்படுமென அரசும் உறுதியளித்துள்ளது. தனியார் பள்ளிகள் எஸ்.சி.,/எஸ்.டி., இடஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். 

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...