சிறுவாணி சாலையில் மேலும் 35 மரங்கள் அகற்றும் பணிகள் நிறுத்தம்

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 35 மரங்களை வெட்டி அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 35 மரங்களை வெட்டி அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலை, அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற முக்கிய சாலைகளையும் இணைப்பதில்லை. எனவே, மரங்களை வெட்டி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 83 மரங்களை மட்டுமே அகற்ற முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள், மேலும் 35 மரங்களை வெட்டாமல், சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...