உதகையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது ரோஜா கண்காட்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.



உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் ரோஜா கண்காட்சியை சிறப்பாக நடத்த தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உலக ரோஜா சம்மேளனத்தினால் சிறந்த ரோஜா பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பூங்காவில் சுமார் 4,000 வகையான ரோஜாக்கள் சுமார் 40 ஆயிரத்திற்கு மேலான செடிகளில் பூத்து குலுங்குகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



மேலும் ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலிருந்து பல வண்ண ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ரோஜா பூங்காவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ. 46 லட்சம் மதிப்பில் காட்சி அறையும் அமைக்கப்பட்டு வருவது இப்பூங்காவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...