புதுப்பொலிவு பெறுமா கூடலூர் ஊசி மலை சுற்றுலாத்தலம்?

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது.

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது. 



நீலகிரி மாவட்டம் கூடலூரில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஊசி மலை என்ற இரு பிரதான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில், முதுமலை புலிகள் காப்பகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

வளர்ப்பு யானைகள் முகாம், யானை சவாரி, வாகன சவாரி என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் முதுமலையில் ஏராளம். இதன் காரணமாக முதுமலை மற்றும் அதையொட்டியுள்ள மசினகுடி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.



ஊசி மலை 

கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஊசி மலை. வனத்தை ஒட்டியுள்ள இந்த காட்சி முனையில் இருந்து கூடலூர் பகுதியை பறவையின் பார்வையில் கண்டு ரசிக்கலாம். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. 



மலையின் உச்சியில் உள்ள காட்சி முனைக்கு செல்லும் பாதை 'கரணம் தப்பினால் மரணம்' என்பதைப் போல ஆபத்தானது. சற்றும் அசந்தால் பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அந்த பாதையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்புகள் தற்போது உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. தடுப்புகள் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையிலேயே சுற்றுலா பயணிகள் நடமாடுகின்றனர். 



மேலும், காட்சி முனையில் சிலர் அருவருக்கத்தக்க முறையில் கிறுக்கிச் சென்றுள்ளனர். இது அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், நுழைவு வாயிலில் உள்ள காவலர் அறையை பல முறை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் காரணமாக மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.



"நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஊசி மலையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வனத்துறையினர் விளக்கமளிக்கின்றனர். ஆனால், ஊசி மலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இப்பகுதியை சுற்றுலாத் துறை கண்டு கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய இந்த நிலையில், ஊசி மலையை அரசு நல்ல முறையில் பராமரித்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...