சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்து நாசம் : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார்.  அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பத்குமார் மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், ஜீவானந்தம் ஆகிய மூவரும் இன்று காலை திருப்பூரிலிருந்து மாருதி 800 வகை காரில் திருமூர்த்திமலை கோவிலுக்குச் சென்றனர். 



அவர்களது கார் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறம் உள்ள பேனட்டில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த மூவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி எரியத் தொடங்கியது. பின்னர், தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். 

தீ விபத்தில்  கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...