கூடலூருக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் 'கோடை மலர்கள்'

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வனப்பகுதியில் பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது.

அதேவேளையில், கோடை காலத்தில் பொலிவாகக் காணப்படும், 'கொன்றை, மே பிளவர், ஜெகரண்டா' மலர்கள் பல இடங்களிலும் பூத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சாலையின் இருபுறங்களிலும், சிப்பாய்கள் நின்று ராஜாக்களை வரவேற்பது போன்று, இந்த மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.



இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்களில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரம்மியத்தை ரசித்து பயணிக்கலாம்,'' என்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....