திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதலமைச்சர் குறித்த விளம்பரம் நிறுத்தம்

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததற்கு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகிறார். பூசாரி அந்த பெண்ணுக்கு அர்ச்சனை செய்யும் போது அந்தப் பெண், சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்ல, சாமி பெயருக்கு என்கிறார். இதற்கு பூசாரி..எந்த சாமிக்கு என்று கேட்க..அந்தப் பெண் நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்கிறார். திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்தவர்கள் இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு தற்போது மீம்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விளம்பரத்தை திரையரங்குகளில் ஒளிபரப்புவதை நிறுத்த தமிழக செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "முதலமைச்சர் குறித்து திரையரங்குகளில் வெளியான விளம்பரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டு, அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது," எனக் கூறினார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...