அரசின் உரிமம் பெற்று மணல் எடுத்து வரும் லாரி சிறைபிடிப்பு..! : பழிவாங்கும் செயல் என நொய்யல் பாதுகாப்பு குழுவினர் புகார்

கோவை : திருச்சியில் இருந்து அரசின் உரிமம் பெற்று மணல் எடுத்து வந்த லாரியை உக்கடம் பைபாஸ் சாலையில் வைத்து கோவை வடக்கு தாசில்தார் மடக்கி பிடித்ததாக நொய்யல் பாதுகாப்பு குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை : திருச்சியில் இருந்து அரசின் உரிமம் பெற்று மணல் எடுத்து வந்த லாரியை உக்கடம் பைபாஸ் சாலையில் வைத்து கோவை வடக்கு தாசில்தார் மடக்கி பிடித்ததாக நொய்யல் பாதுகாப்பு குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். 

நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்த நிலையில், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் நொய்யல் ஆற்றின் ஓரங்களிலும், சந்தேகத்திற்கு இடமாக சாலையில் செல்லும் லாரிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றையும் தடுத்து நிறுத்தி சோதனைகள் செய்துவருகின்றனர். 

அதேபோல, ஆலாந்துறை பகுதிகளில் மணல் அள்ளும் நபர்களைப் பிடிக்க அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நொய்யல் பாதுகாப்பு குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பல மணல் கொள்ளையர்களை அதிகாரிகளிடமும் பிடித்து கொடுத்துள்ளனர்.



"அரசின் உரிமம் பெற்று திருச்சியில் இருந்து வந்த மணல் லாரியை, நொய்யல் மண் எனக் கூறி எங்களை பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகளின் துணையுடன் மடக்கிப் பிடித்துள்ளனர். எங்களிடம் அனைத்து சான்றுகளும் உள்ளன. வாகனம் பழுதால் தேதி தான் தள்ளிவிட்டது. ஆனால், எங்களை தவறாக சித்தரித்து பழிவாங்கும் விதத்தில் மணல் கும்பல் செயல்படுகிறது," என நொய்யல் பாதுகாப்பு குழுவினர் கூறுகின்றனர்.

மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகளின் தீவிர எச்சரிக்கைகள் :

"கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக செய்திகளில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதனைத் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிறப்பு பிரிவு போலீசார், காவலர்களுக்கு எச்சரித்துள்ளனர். 

இதில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, கோவை புறநகர் மாவட்ட சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல் இருப்பின் 9445846282 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்கள் கொடுக்கலாம். அதேபோல, நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்," என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.

மணல் கொள்ளையை தடுக்க உதவிய நொய்யல் பாதுகாப்பு குழுவினரின் லாரியே மணல் கடத்தலுக்கு பயன்படுவதாக எழுந்த புகார் மீதான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு நொய்யல் பாதுகாப்பு குழுவின் ரங்கநாதன் கூறியதாவது :- அதிகாரிகள் உத்தரவிற்கு பிறகும் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அதிகாரிகள் மணல் அள்ளுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பல நேரங்களில் இந்த மணல் கொள்ளையை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு வந்து குற்றவாளிகளைப் பிடித்து கொடுத்துள்ளோம். இந்தக் கோபத்தால் மணல் கொள்ளையர்கள் நாங்கள் முறையாக அரசு அனுமதியோடு திருச்சி மணச்சநல்லூரிலிருந்து கொண்டு வந்த மணலை நொய்யல் மணல் என அவதூறு பரப்பி வருகின்றனர். எங்களிடம் அனைத்துப் பதிவுகளும் உள்ளது. பர்மிட் தேதி மட்டும் தான் தள்ளி போகியுள்ளது. அதற்கு இவர்கள் முறையற்று தவறாக குற்றம் சாட்டுகின்றனர், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...