கோவையில் சங்க தேர்தல் வேட்பாளராக தமிழக ஆளுநரை சேர்த்த கூட்டுறவு கடன் சங்கம்

கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காளபட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தின்(கே1691) நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கூட்டுறவு சங்கத்தில் 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் 119 வரிசை எண்ணில் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் 'ஆளுநர், தமிழ்நாடு அரசு' எனவும், தந்தை பெயர் என்ற இடத்தில், 'கவர்மெண்ட்' என்றும், முகவரியில் 'தமிழ்நாடு' என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

கோவை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீதமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறாமலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 27-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற பல்வேறு மோசடிகளை ஆளுங்கட்சியினர் செய்து வரும் நிலையில் காளப்பட்டி நகரக் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக நடைபெறும் தேர்தலில் தமிழக ஆளுநரை உறுப்பினராக சேர்த்து விட்டு அவரது தந்தை பெயர் கவர்மெண்ட் என குறிப்பிட்டிருந்தது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...