பாரத் கலா ஆராதனாவின் 'கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைகளை விளக்கும் நிகழ்ச்சி'

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் 'கேரளக் கலைகள்' (Essence of Kerala) எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சி, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் 'கேரளக் கலைகள்' (Essence of Kerala) எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சி, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய, நாட்டுப்புற கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு நடனங்கள் அரேங்கேற்றப்பட்டன. அத்தோடு, நடணக் கலைகள் பற்றிய வரலாறும், நடனத்தின் நுணுக்கமான அசைவுகள் பற்றிய தகவல்களும் விளக்கப்பட்டன. 



இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜி.எஸ். மணியன் பேசுகையில், "பறந்து விரிந்த பாரததேசம் கலைகளின் கூடம். ஒவ்வொரு மாநிலமும் தனக்கான பாரம்பரிய, கிராமிய கலைகளை தனக்கே உரிய தனித்துவத்தோடு கொண்டுள்ளது. சில கலை வடிவங்கள் அழியும் தருவாயிலும் உள்ளன. அழியும் தருவாயில் உள்ள கலை வடிவங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதும், இருக்கும் கலைகளை ஆராதிப்பதும் தான் இந்நிகழ்வின் அடிப்படைநோக்கம்.



இந்த முயற்சிக்கு வடிவம்கொடுக்கும் வகையிலும், அந்தந்த மாநிலத்தின் கலை வடிவங்கள், அதன் தனித்துவம், பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் "பாரத் கலா ஆராதனா" மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும், ஒரு மாநிலம் சார்ந்த கலைகளைப் போற்றி பூசிக்கும் விதமாக அமையும்" என்றார்.



கடந்த ஜனவரி மாதம், தமிழகத்தின் கலைகள் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், அடுத்த நிகழ்வாக கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக 'பாரத் கலா ஆராதனா' அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...