வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10-ம் தேதி போராட்டம்

கோவை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்தும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்தும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆதி தமிழர் கட்சி தலைவர் வெண்மணி பேசுகையில், "சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் லலித் தலைமையிலான அமர்வு வழங்கி உள்ள தீர்ப்பு சாதிய வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. 

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முறையாக வழக்குகள் பதியப்படுவது இல்லை. அவ்வாறு பதிவு செய்யப்பட்டாலும் விரைவில் நீதி கிடைப்பதில்லை. இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பா.ஜ.க., இந்துத்துவ கொள்கை கொண்ட இந்த நீதிபதிகள் வேண்டும் என்றே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக இவ்வாறு தீர்ப்பு கொண்டு வந்து இருக்காலாம். இந்தத் தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையாவிட்டால் ஏப்.,10-ல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...