வெளி உணவுகளுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தடை விதிக்கக் கூடாது

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை திரையரங்குக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தடை, மருத்துவ காரணங்களால் வெளியில் விற்கப்படும் உணவை சாப்பிட முடியாத மூத்த குடிமக்களை வெகுவாக பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அதிக விலைக்கு விற்கக் கூடாது. அவை சாதாரண கட்டணங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இருதரப்பு வாதங்களைக் கேட்டு பரிசீலனை செய்து, 6 வாரங்களுக்குள் இதற்கான கொள்கை வரையறுக்கப்பட்டும் என அரசு தரபிபில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...